பால்பாயின்ட் பேனா. (பந்துமுனைப் பேனா) !
பேனாக்களில் முக்கியமானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எழுதுவதற்கு பயன்படும் பால்பாயின்ட் பேனா. இது தமிழில் பந்து முனைப் பேனா என்று அழைக்கப் படுகிறது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிகை யாளர் லாஸ்லோ பைரோ 1937-ம் ஆண்டு இதை கண்டுபிடித்தார்.பத்திரிகை அச்சடிக்கும்போது பயன்படுத்தும் மை உடனே உலர்ந்து போவதை அறிந்தவர், அந்த மையை பயன்படுத்தி பேனா தயாரிக்க முயற்சி செய்தார்.அவருடைய சகோதரர் ஜார்ஜ் பைரோ ,இந்த கண்டுபிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அடர்த்தியான மை வெளியேறுவதற்கு வசதியாக இருவரும் சேர்ந்து பந்து போன்ற குமிழ் முனையை பொருத்தினர்.இரண்டு சகோதரர்களும் இணைந்து இந்த பேனாவிற்கான காப்புரிமையை பெற்றனர்.
0
Leave a Reply